» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)

கேரளாவில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 29 ந் தேதி நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா-பாரசாலா ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண்.16127 நாகர்கோவில் டவுன்-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் டவுனில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 29-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16128 குருவாயூர்-நாகர்கோவில் டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயிலானது குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நாகர்கோவில் டவுனில் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் செல்கிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மங்களூரு சென்டிரலில் இருந்து மார்ச் 28-ந்தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் 16649 திருவனந்தபுரம் சென்டிரல்-கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி!
வியாழன் 8, மே 2025 11:29:44 AM (IST)
