» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்: ஆட்சியர் வழங்கினார்.
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:27:03 PM (IST)

பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் பங்கு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் பங்கு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கி தெரிவிக்கையில் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் உள்நாட்டு மீனவர்களுக்கு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் 2024-25-ம் ஆண்டு மாநில நிதி திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பரிசலுக்கு ரூ.9,250/- வீதம் பேச்சிப்பாறை நீர்தேக்கத்தில் 10 பங்கு மீனவர்களுக்கும், சிற்றார் நீர்தேக்கத்தில் 10 பங்கு மீனவர்களுக்கு என மொத்தம் ரூ.1.85 இலட்சம் மானியத்தில் 20 பயனாளிகளுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டது. இதன்மூலம் பங்குமீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) சின்னக்குப்பன், உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ்(நாகர்கோவில்), அஜித் ஸ்டாலின் (குளச்சல்) வட்டார வளர்ச்சி அலுவலர், பங்கு மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:23:17 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு துரோகம் செய்யும் திமுக தப்பிக்கவே முடியாது: அன்புமணி காட்டம்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:57:04 PM (IST)

சாமிதோப்பு அய்யா கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:32:12 PM (IST)

தமிழகத்தில் செப்.5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:40:17 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் : சசிகாந்த் எம்பியுடன் ராகுல் பேச்சு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:31:11 PM (IST)

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: 40 டன் குப்பைகள் அகற்றம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:02:28 PM (IST)
