» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நேரத்தில் ஊருக்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
குமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து டாரஸ் லாரிகளால் உயிர் பலிகள் நிகழ்ந்ததை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.கனிம வள சரக்கு காலி வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் காலை 7- மணி முதல் காலை 10 -மணி வரையிலும், பிற்பகல் 3- மணி முதல் இரவு 6- மணி வரையிலும் மாவட்டத்துக்குள் நுழைய தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே மணக்குடி பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போக்குவரத்து போலீசார் இன்று காலை அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். நேர கட்டுப்பாட்டை மீறி ஊருக்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)

நான் முகத்தை மூடிச் சென்றேனா? முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் விளக்கம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:05:22 PM (IST)

ஓபிஎஸ் உட்பட 3பேரை கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் திட்டவட்டம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 12:32:30 PM (IST)

பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் : அரசாணை வெளியீடு
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:16:50 AM (IST)
