» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் புரட்டாசி கிருத்திகை விழா: தங்கத்தேரில் ஜெயந்திநாதர் வீதி உலா!
சனி 11, அக்டோபர் 2025 8:17:42 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரான முருகர், வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை திரளான பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தன.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தேவசேனா அம்மனுடன் 108 மகாதேவர் சந்நிதியில் எழுந்தருளினார். அங்கு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு, கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு
ஞாயிறு 12, அக்டோபர் 2025 7:38:56 PM (IST)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி: தூத்துக்குடி போலி எஸ்ஐ உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:16:48 AM (IST)

நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என கருத வேண்டாம்: டிடிவி தினகரன் பேட்டி
சனி 11, அக்டோபர் 2025 5:44:12 PM (IST)

அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருது :மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சனி 11, அக்டோபர் 2025 4:28:28 PM (IST)

சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 11, அக்டோபர் 2025 4:20:34 PM (IST)

கரூர் சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை: 2-வது முறையாக புஸ்சி ஆனந்த் மனு தாக்கல்!
சனி 11, அக்டோபர் 2025 12:24:51 PM (IST)
