» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடிக்கு ரயிலில் வந்த 400 மெட்ரிக் டன் யூரியா உரம்: 38 கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைப்பு!
சனி 11, அக்டோபர் 2025 8:48:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வினியோகம் செய்வதற்காக 400 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயிலில் வந்தது. அந்த உரம் 38 கூட்டுறவு சங்கங்களுக்கு லாரிகளில் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவசாகுபடிக்கு தேவையான யூரியா உரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்கோ நிறுவனத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து 1320 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயில் மூலம் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உரத்தில் 1050 டன் யூரியா தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், 270 மெட்ரிக் டன் தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 38 கூட்டுறவு சங்கங்களுக்கு 400 மெட்ரிக் டன் யூரியா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் யூரியா, 4 ஆயிரத்து 420 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 3 ஆயிரத்து 520 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 560 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நடப்பு ராபி பருவ உரத் தேவையை கருத்தில் கொண்டு அரசு தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக 52 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா, 53 ஆயிரம் மெட்ரிக் டன் டி.ஏ.பி மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் 50 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரங்களை உர நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து மூடைகளில் அடைத்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.
எனவே மாவட்டத்தில் போதுமான உரம் கையிருப்பில் உள்ளதால் விவசாய பெருமக்கள் தேவைக்கேற்ப உரங்கள் வாங்கி பயன்படுத்தலாம். உரம் வாங்கும் போது தங்கள் ஆதார் எண் கொண்டு விற்பனை முனையக் கருவியில் பில் போட்டு வாங்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு
ஞாயிறு 12, அக்டோபர் 2025 7:38:56 PM (IST)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி: தூத்துக்குடி போலி எஸ்ஐ உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:16:48 AM (IST)

நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என கருத வேண்டாம்: டிடிவி தினகரன் பேட்டி
சனி 11, அக்டோபர் 2025 5:44:12 PM (IST)

அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருது :மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சனி 11, அக்டோபர் 2025 4:28:28 PM (IST)

சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 11, அக்டோபர் 2025 4:20:34 PM (IST)

கரூர் சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை: 2-வது முறையாக புஸ்சி ஆனந்த் மனு தாக்கல்!
சனி 11, அக்டோபர் 2025 12:24:51 PM (IST)
