» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
வியாழன் 30, அக்டோபர் 2025 11:58:15 AM (IST)
மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருளை கடத்தி வந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சுங்கத்துறை நுண்ணரிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொழும்பு விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
தஞ்சையைச் சேர்ந்த முகமதுமைதீன் (26), சென்னையை சேர்ந்த சாகுல்ஹமீது(50) ஆகியோர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது 8 கிலோ ‘ஹைரோ போனிக்’ என்ற உயர்ரக போதைப்பொருளை மறைத்து கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அந்த 2 பேரையும் கைது செய்தனர். தாய்லாந்தில் இருந்து இந்த போதைப்பொருளை வாங்கி அதனை இலங்கை வழியாக மதுரைக்கு கடத்தி வந்ததாகவும், அதன் இந்திய மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!
புதன் 5, நவம்பர் 2025 8:50:52 AM (IST)

முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம் : ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
புதன் 5, நவம்பர் 2025 8:48:27 AM (IST)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை: ஒப்புக்கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:53:48 PM (IST)

தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் துவக்கம்: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:19:20 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:34:39 PM (IST)




