» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு : அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 9:22:21 PM (IST)
திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் பள்ளம் தோண்டப்பட்டபோது, 100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோவிலூர் சிவன் கோவில் உள்ளது. 3-ம் ராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கோவிலில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவிலின் சிதிலமடைந்த கருவறையை கட்டுவதற்காக இன்று பள்ளம் தோண்டப்பட்டது.
சில அடி தூரம் பள்ளம் தோண்டப்பட்டபோது, அதில் புதையல் ஒன்று இருந்ததை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த புதையலை மீட்டு பார்த்தபோது 100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் அதில் இருந்ததுள்ளது. இதையடுத்து கோவில் கருவறையில் கண்டெடுக்கப்பட்ட தங்கக்காசு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கக்காசுகளை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வணிக வளாக கட்டிடம் இடிந்து காவலர் படுகாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 3, நவம்பர் 2025 7:49:54 PM (IST)

இலங்கை சிறைப்பிடித்த 35 மீனவர்களை விடுவிக்க வேண்டும் : விஜய் வலியுறுத்தல்!
திங்கள் 3, நவம்பர் 2025 4:01:18 PM (IST)

தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணி இடங்கள்: நவ.16 வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 3, நவம்பர் 2025 3:18:29 PM (IST)

அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரை கொல்ல முயற்சி: ஆட்சியரிடம் புகார்!
திங்கள் 3, நவம்பர் 2025 12:55:06 PM (IST)




