» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!
திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)
முட்டம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் நீந்தி தப்பினார். மேலும் ஒருவர் கடலில் மாயமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் சட்டமன்ற தொகுதியில் உள்ள முட்டம் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயரின் மகன் சுமன் ( 32 வயது) மற்றும் சத்தியான் மகன் ரகு ஆகிய இரு மீனவர்கள் கொல்லத்தில் மீன்பிடி தொழில் முடித்து முட்டம் நோக்கி கடற்கரை வழியாக வந்தபோது திடீர் அலைக்காற்றில் வள்ளம் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.
இதில் ரகு நீந்தி நீரோடி பகுதியில் கரை சேர்ந்தார். ஆனால் சுமன் இதுவரை கரை திரும்பவில்லை. அவரை மீட்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், கடலோர காவல்துறை, மீன்வளத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சஹகார் பாரதி தலைவரும் முன்னாள் கூட்டுறவு இணைய தலைவருமான இ.எஸ். சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில ஹேக்கத்தான் இன்னோவேஷன் போட்டி: தூத்துக்குடி ஸ்பிக்நகர் பள்ளி மாணவர்கள் சாதனை!
திங்கள் 17, நவம்பர் 2025 5:49:10 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளால் சுமார் ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர் - சீமான் குற்றச்சாட்டு!
திங்கள் 17, நவம்பர் 2025 5:41:09 PM (IST)

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா அச்சுறுத்தல்: தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
திங்கள் 17, நவம்பர் 2025 5:02:52 PM (IST)

தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடு ஆந்திராவுக்குச் சென்றது கவலை அளிக்கிறது : பிரேமலதா பேட்டி
திங்கள் 17, நவம்பர் 2025 4:56:58 PM (IST)

சவுதி அரேபியாவில் சாலை விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:58:31 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை எப்போது துவங்கும்? வெதர்மேன் தகவல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:44:28 PM (IST)




