» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடுதல் கட்டணம் வசூலித்த 4 மினி பஸ்கள் மீது நடவடிக்கை : ஏர்ஹாரன்களும் பறிமுதல்!!
புதன் 26, நவம்பர் 2025 8:26:51 AM (IST)

கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த 4 மினி பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் ஓடும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா உத்தரவின் பேரில் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் அண்ணா பஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஓடும் மினி பஸ்களில் திடீர் சோதனை நடத்தினர்.
மினி பஸ்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமே ரூ.11 தான். ஆனால் 4 மினி பஸ்களில் பயணிகளிடம் ரூ.13, ரூ.14 என கூடுதலாக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 4 மினி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் 4 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அந்த ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)

மாநகராட்சியில் ரூ.10கோடி முறைகேடு: உதவி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு!
புதன் 26, நவம்பர் 2025 11:01:03 AM (IST)

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ம் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:31:11 PM (IST)

சுபமுகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் நவ.27ம் தேதி கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:17:58 PM (IST)

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:13:27 PM (IST)




