» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது : 19,076 பேர் பங்கேற்பு
திங்கள் 2, மார்ச் 2026 10:46:46 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. இன்றைய தேர்வில் 19,076 பேர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (02.03.2026) தொடங்கின. இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இத்தேர்வுகள் மார்ச் 02 முதல் மார்ச் 26 வரை நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 93 மையங்களில் 8,547 மாணவர்கள் மற்றும் 10,724 மாணவிகள் என மொத்தம் 19,271 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முதல் நாள் தேர்வில் 8,435 மாணவர்கள் மற்றும் 10,641 மாணவிகள் என மொத்தம் 19,076 பேர் பங்கேற்றனர். ஒட்டுமொத்த வருகை சதவீதம் 99% ஆகும். அனைத்து மையங்களிலும் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தரைதள அறைகள் மற்றும் சொல்வதை எழுதுபவர் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார்? முழு விவரம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:23:08 PM (IST)

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: இ.பி.எஸ் கடும் தாக்கு!
வியாழன் 5, மார்ச் 2026 3:14:09 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)

