» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தமிழகத்தின் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி யுடன் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் சந்தித்து பசுமை பயணம் குறித்து விளக்கினார்.
போலீஸ் வட்டாரத்தில் டி.கே.ஆர் என்றழைக்கப்படுபவர் டி. கே.ராஜேந்திரன். தமிழக போலீஸ் டி.ஜி.பியாக இருந்தவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். அவரிடம் பிறர் படிக்க வேண்டியது எளிமை. தற்போது தமிழக தடகளச் சங்கத்தின் தலைவராக வால்டர் தேவாரத்தை தொடர்ந்து விளங்குகிறார். டி.கே ராஜேந்திரனை சமூக நல ஆர்வலர் வெங்காடம் பட்டி பூ.திருமாறன் சந்தித்து தமது சேவைகள் குறித்து விளக்கினார். முக்கியமாக தற்போது தமிழகத்தில் நாலாதிசையிலும் எதிரொலிக்கும் விதைப்பந்து புரட்சி குறித்து விளக்கினார்.
விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் மாதிரிகளை திருமாறன் போலீஸ் டி.ஜி.பி டிகே ஆருக்கு வழங்கினார். வீசிய விதைப்பந்துகளால் பூமியின் மர எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். அதைவிட மரம் வளர்க்கும் எண்ணம் மாணவ மாணவிகளிடம் நிச்சயம் துளிர்விடும் என திருமாறன் கூறியதை டி. கே.ஆர் ஆமோதித்தார். இந்த சந்திப்பின்போது பசுமை ஜவஹர் உடன் இருந்தார். ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் விதைப்பந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் துவங்கிட திட்டமிடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்: பிரேமலதா
ஞாயிறு 31, மே 2026 8:39:42 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
ஞாயிறு 31, மே 2026 10:35:20 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி: 17 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 31 பேர் பணியிட மாற்றம்!
ஞாயிறு 31, மே 2026 9:29:04 AM (IST)

இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது!
ஞாயிறு 31, மே 2026 9:22:28 AM (IST)

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு : ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றச்சாட்டு!
ஞாயிறு 31, மே 2026 9:01:43 AM (IST)


