» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!

திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)

திருமணத்தின் போது வரதட்சணையாகக் கொடுத்த நகைகளைத் திரும்பக் கேட்டுத் தகராறு செய்த தாயார் மீது புதுப்பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஜூன் 15 அன்று மீனவ கிராமத்தைச் சேர்ந்த புதுப்பெண்ணுக்கும் இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது தாயார் தன் மகளுக்கு 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக வழங்கியுள்ளார்.

திருமணக் கடன்களை அடைப்பதற்காக மகளுக்குக் கொடுத்த நகைகளைத் தாயார் உறவினர்களுடன் சென்று திரும்பக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். நகைகளைத் தர மறுத்த புதுப்பெண், தன் தாய் மீது குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் இருதரப்பையும் அழைத்து விசாரித்த போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. புதுப்பெண் தன் நகைகள் அனைத்தையும் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறி, தாயாரிடம் உள்ள தன் ஆதார் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ்களை மீட்டுத் தருமாறு கோரினார். வரதட்சணை விவகாரம் என்பதால் நீதிமன்றத்தை நாடித் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி, இருதரப்பிடமும் எழுதி வாங்கிவிட்டுக் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory