» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலருவி எக்ஸ்பிரஸ் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கம் : பயணிகள் நலச் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு!

செவ்வாய் 21, ஜூலை 2026 3:22:46 PM (IST)

Palaruviexpress.jpg

தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில்  நவீன எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கத் தொடங்கியுள்ளது.

பயணிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, பாலருவி விரைவு ரயிலில் கூடுதல் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று புதிதாக இணைக்கப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இப் புதிய மாற்றத்தை வரவேற்கும் விதமாகத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயில் எஞ்சின், பெயர்ப் பலகைகளுக்கு மாலை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க துணைத் தலைவர் எஸ்.அந்தோணி முத்துராஜா, செயலாளர் மா.பிரமநாயகம், பொருளாளர் வே.லட்சுமணன், நிர்வாகச் செயலாளர் J.A.N.ஆனந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.ராஜா மோகன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக இணைக்கப்பட்ட மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் முதன்முறையாகத் தூத்துக்குடியில் இருந்து 40 பயணிகள் பயணித்தனர். எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றியமைத்த தென்னக ரயில்வே நிர்வாகத்திற்குத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் மா.பிரமநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory