» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:03:58 AM (IST)

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
தவெகவின் செய்தித் தொடர்பாளராக இருந்துவரும் ஃபெலிக்ஸ் ஜெரால்டை தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் வகிப்பார். சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி என்பது சிறுபான்மையினர் சமூகங்களின் பிரச்னைகளை நேரடியாக அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலமாகும்.
சிறுபான்மையினர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பே தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம். சிறுபான்மையினர் மீதான புகார்களை விசாரித்தல், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்தல், சமூக நீதி தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மேற்கொள்கிறது. யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, கடந்தாண்டில்தான் தவெகவில் சேர்ந்து கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:31:40 PM (IST)

திருத்தணியில் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்: போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:09:11 PM (IST)

விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத முதல்-அமைச்சர் விஜய்... விசாரணை ஒத்திவைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:58:25 AM (IST)

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயார்: முதலமைச்சர் விஜய்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 10:42:14 AM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் - அவரது மனைவி கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:11:26 AM (IST)


