» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

269 ரன்கள் விளாசி ஷுப்​மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!

வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)



இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷூப்மன் கில் 269 ரன்கள் விளாசி அசத்தினார். 

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, நித்திஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 114, ரவீந்திர ஜடோ 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. ஷுப்​மன் கில்​லும், ஜடேஜா​வும் இங்​கிலாந்து பந்​து​வீச்​சாளர்​களுக்கு அழுத்​தம் கொடுத்து ரன்​கள் சேர்த்​தனர். தனது 23-வது அரை சதத்தை கடந்த ஜடேஜா 137 பந்​து களில், ஒரு சிக்​ஸர், 10 பவுண்​டரிகளு​டன் 89 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஜோஷ் டங்க் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். ஜோஷ் டங்க் வீசிய ஷார்ட் பாலை, ஜடேஜா குதி​காலை தூக்​கியபடி தற்​காப்பு ஆட்​டம் விளை​யாட முயன்​றார். ஆனால் பந்து கையுறை​யில் பட்டு விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித்​திடம் எளி​தாக கேட்ச் ஆனது.

6-வது விக்​கெட்​டுக்கு ஷுப்​மன் கில், ஜடேஜா ஜோடி சுமார் 47 ஓவர்​கள் களத்​தில் நின்று 203 ரன்​கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்​கிய வாஷிங்​டன் சுந்​தர் நிதான​மாக விளை​யாட ஷுப்​மன் கில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்​டார். அபார​மாக விளை​யாடிய ஷுப்​மன் கில் 311 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 21 பவுண்​டரி​களு​டன் இரட்டை சதம் விளாசி​னார். இதன் மூலம் இங்​கிலாந்து மண்​ணில் இரட்டை சதம் விளாசிய 3-வது இந்​திய வீரர் என்ற சாதனையை படைத்​தார் ஷுப்​மன் கில். இதற்கு முன்​னர் 1979-ல் சுனில் கவாஸ்​கர் (221), 2002-ல் ராகுல் திரா​விட் (217) ஆகியோர் இரட்டை சதம் அடித்​திருந்​தனர்.

ஷுப்​மன் கில்​லின் அற்​புத​மான ஆட்​டத்​தால் இந்​திய அணி 129-வது ஓவரில் 500 ரன்​களை கடந்​தது. நிதான​மாக விளை​யாடிய வாஷிங்​டன் சுந்​தர் 103 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோ ரூட் பந்​தில் போல்​டா​னார். 7-வது விக்​கெட்​டுக்கு வாஷிங்​டன் சுந்​தர், ஷுப்​மன் கில் ஜோடி 144 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து ஆகாஷ் தீப் களமிறங்​கி​னார்.

அபார​மாக விளை​யாடி வந்த ஷுப்​மன் கில் 387 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 30 பவுண்​டரி​களு​டன் 269 ரன்​கள் குவித்த நிலை​யில் ஜோஷ் டங்க் வீசிய பந்தை ஸ்கொயர் லெக் திசை​யில் அடித்த போது ஆலி போப்​பிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து ஆகாஷ் தீப் 6 ரன்​னில் ஷோயிப் பஷிர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

கடைசி விக்​கெட்​டாக முகமது சிராஜ் 23 பந்​துகளில் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷோயிப் பஷிர் பந்​தில் ஸ்டெம்​பிங் ஆனார். முடி​வில் இந்​திய அணி 151 ஓவர்களில் 587 ரன்​கள் குவித்து முதல் இன்​னிங்​ஸில் ஆட்​ட​மிழந்தது. பிரசித் கிருஷ்ணா 5 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இங்​கிலாந்து அணி சார்​பில் ஷோயிப் பஷிர் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். கிறிஸ் வோக்​ஸ், ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர். இதையடுத்​து இங்​கிலாந்​து அணி பேட்​டிங்​ செய்​யத்​ தொடங்​கியது.

இங்கிலாந்து தடுமாற்றம்: இங்கிலாந்து அணிக்காக ஸாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அந்த இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை இந்தியாவின் ஆகாஷ் தீப் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் டக்கெட் மற்றும் ஐந்தாவது பந்தில் ஆலி போப் என அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தை அப்செட் செய்தார் ஆகாஷ். அதற்கடுத்த பந்தில் ஹாட்ரிக் வீழ்த்தும் வாய்ப்பை மிஸ் செய்தார். ஜோ ரூட் அந்த பந்தை தடுத்து ஆடி இருந்தார்.

8-வது ஓவரில் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றினார் முகமது சிராஜ். பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.

பர்மிங்காம் டெஸ்டில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷுப்மன் கில். இதற்கு முன்னர் 1979-ல் தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டின் 4-வது இன்னிங்ஸில் சுனில் கவாஸ்கர் 221 ரன்கள் விளாசியிருந்தார்.  மேலும் சுப்மன் கில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory