» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடிய தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார்.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீப்தி சர்மா, 212 ரன்கள் குவித்து 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் விளாசிய தீப்தி சர்மா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், தொடர் நாயகி விருதையும் வென்றார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திறமைமிகு வீரர் திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமித்து கெளரவிப்பதாக அம்மாநில காவல்துறை தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 உலகக்கோப்பையில் ஹாரி புரூக் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, பிப்ரவரி 2026 10:23:25 AM (IST)

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு - தென்னாப்பிரிக்க அணியின் கையில்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:08:04 PM (IST)

பேட்டிங் சொதப்பல்: சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி!
திங்கள் 23, பிப்ரவரி 2026 10:33:50 AM (IST)

இந்தியா அரையிறுதி சுற்றுக்கு செல்லாது : முன்னாள் பாகிஸ்தான் வீரர் கணிப்பு
சனி 21, பிப்ரவரி 2026 11:16:54 AM (IST)

ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக 17 வெற்றிகள்: புதிய உலக சாதனை படைத்தது இந்தியா!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:13:45 AM (IST)

டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:08:40 AM (IST)

