» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கொல்கத்தாவை கதறவிட்ட முகுல் சவுத்ரி: 7 சிக்ஸர்கள் விளாசிய தோனி ரசிகர்!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:29:44 PM (IST)



நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் முகுல் சவுத்ரி அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறிய போது களமிறங்கிய இவர், இக்கட்டான சூழலில் அபாரமாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்தார். இந்த ஆட்டத்தில் வெறும் 27 பந்துகளில் 54 ரன்களை விளாசிய முகுல் சவுத்ரி, ஐபிஎல் மினி ஏலத்தில் 2.6 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டவர். 

21 வயதான இவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். தோனியைப் போலவே இவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகுல், உள்ளூர் கிரிக்கெட்டில் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் மிதவேகப் பந்துவீச்சாளராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர், பின்னர் தனது அதிரடி பேட்டிங் பாணியால் கவனம் பெற்றார்.

2025-26 சையது முஷ்டாக் அலி தொடரில், காயம் காரணமாக விலகிய கார்த்திக் சர்மாவுக்குப் பதிலாக வாய்ப்பு பெற்ற முகுல், 5 இன்னிங்ஸ்களில் 173 ரன்களைக் குவித்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 198.55 ஆக இருந்தது. தோனியைத் தனது முன்மாதிரியாகக் கொண்ட இவர், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர்களைப் பறக்கவிடும் திறன் கொண்டவர்.

பரபரப்பான வெற்றி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ஒரு கட்டத்தில் லக்னோ அணி 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆவேஷ் கானுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தார். இதில் முகுலின் பங்களிப்பு மட்டுமே 52 ரன்கள்.

இந்த இன்னிங்ஸில் மொத்தம் 7 சிக்ஸர்களை விளாசிய அவர், கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது, இரண்டு இமாலய சிக்ஸர்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

"தந்தையின் கனவு" - முகுல் சவுத்ரி உருக்கம்: ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு முகுல் சவுத்ரி பேசியதாவது:    "எனது தந்தை நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். குடும்பச் சூழல் காரணமாக 12 வயதிற்கு மேல்தான் எனது முறையான பயிற்சியைத் தொடங்க முடிந்தது. ராஜஸ்தானின் சிகர் பகுதியில் தொடங்கி, பின்னர் ஜெய்ப்பூர் மற்றும் குருகிராமில் நவீன டி20 ஆட்டத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன்.

எனக்கான வாய்ப்பில் முழு கவனத்தையும் செலுத்தி, கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது சோனில் (Zone) பந்து வரும்போது அதை விளாசத் தயங்கியதில்லை. இந்த இன்னிங்ஸ் எனக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது."


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory