» சினிமா » செய்திகள்

ரூ.2.52 கோடி செலுத்தத் தவறினால் 6 மாத சிறை: ரஜினி பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:31:33 PM (IST)

கோச்சடையான்’ திரைப்பட வெளியீட்டிற்காகப் பெறப்பட்ட ரூ.10 கோடி கடன் தொடர்பான காசோலை மோசடி வழக்கில், படத்தின் தயாரிப்பாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் போதிய பணம் இல்லாததால் திரும்பியதைத் தொடர்ந்து, கடன் வழங்கிய தரப்பு வழக்குத் தொடர்ந்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர் ரூ.2.52 கோடியை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைச் செலுத்தத் தவறினால், தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory