திருநெல்வேலியின் வரலாறு (10 of 14)

தச்சநல்லூர்
 
திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ வடக்கே உள்ளது. பித்தளைப் பாத்திரத் தொழில் முக்கியமானது. இரண்டு நூலாலைகளும் மின்சார மோட்டார் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற் கூடமும் சர்க்கரை ஆலையும் இங்கு உள்ளன.
 
சிவசைலம்
 
இங்கு ஒளவை ஆஸ்ரமமும், லட்சுமி ஆதார ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் உள்ளன.
 
சங்கர் நகர்
 
இந்தியா சிமெண்ட் தொழிற்சாலையும், தொழில் கல்லூரியும் உள்ளன. மத்தளம் பாறை : தென்காசியிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. மாம்பழ வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறது.
 
பண்பொழி
 
இதன் பெயர் பைம்பொழில். தென்காசிக்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை அழகுடன் செறிந்த காடுகளைக் கொண்டது. சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் உள்ளது. சித்த வைத்திய மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன. தேங்காய் வியாபாரத்திற்கு ஏற்ற இடம். இக்குன்றின் மீது முருகனுக்கு கோவில் உளளது. 600 படிகள் ஏறிச் சென்று முருகனைத் தரிசிக்கலாம்.
 
வடகரை
 
தென்காசியிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. நெல், தென்னைக்குப் பெயர் பெற்றது. பீடித்தொழில் இங்கு குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது.
 
காரையிருப்பு
 
அரசாங்க விதைப்பண்ணை உள்ளது.
 
கடையம்
 
தென்காசியிலிருந்து 15 கி.மீ தொலைவில் ஜம்பு நதிக்கரையில் இருக்கிறது. கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகர் இது. திங்கள் தோறும் சந்தை கூடுகிறது. பன்னீர் வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. ரோஜாப்பூ, தாழம்பூ, நார்த்தம் பழம் முதலியவை வெளியூர்களுக்குச் செல்கிறது.
 
கடைய நல்லூர்
 
கடைய நல்லூர் 3 பகுதிகளைக் கொண்டது. மேல், கீழ்கடைய நல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம் என்பதே அது. இங்கு வியாழக் கிழமை சந்தை. முக்கியத் தொழில் நெசவு. துணிகளுக்கு பளபளப்பேற்றும் காலண்டரிங் ஆலை இங்கு உள்ளது.
 
கோட்டை மலை
 
வாசுதேவ நல்லூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. சுற்றுலாப்பயணத்திற்கு ஏற்ற இடம். இங்குள்ள காடுகளில் மூங்கிலும் பிரம்பும் அதிகம்.
 
தலைவன் கோட்டை
 
முள்ளிக் குளத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது. இங்கு முக்கிய விளை பொருள் தக்காளி, வெண்டைக்காய்.
 
திருமாலபுரம்
 
சுற்றுலாத் தலம். கடைய நல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ளது. முற்கால பாண்டியர்கள் அமைத்த குடை வரைக் கோயிலில் பாண்டியர் கால ஓவியங்கள் உள்ளன. 45மீ உயரமுள்ள இம்மலையின் உச்சியில் ஊற்றும் கத்தோலிக்கத் கோயிலும் உண்டு.
 
புளியங்குடி
 
பாம்புக் கோயில் இரயிலடியிலிருந்து 5கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு கைத்தறி வேட்டி சிறந்த பெயரைப் பெற்றுள்ளது. கருங்கண்ணி பருத்தி விளைச்சல் அதிகம்.
 
சேரன் மாதேவி
 
திருநெல்வேலியிலிருந்து 26கி.மீ தொலைவில் உள்ளது. பழைய கோவில் உண்டு. இவ்வூரில் நெசவுத் தொழில், மண்பாண்டத் தொழில், கொழுந்து மலையில் மூலிகை எடுக்கும் தொழில், ஓடு செய்யும் தொழில், உரத்தொழில் இவற்றுடன் வேளாண்மையும் சிறந்து விளங்குகிறது.


Favorite tags



Tirunelveli Business Directory