» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசு அறிவித்த குழுவில் சசி தரூர் பெயர் இடம்பெற்றது நேர்மையற்றது: ஜெய்ராம் ரமேஷ்
சனி 17, மே 2025 4:49:28 PM (IST)

பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று விளக்கம் அளிப்பதற்கு மத்திய அரசு எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை அறிவித்துள்ளது.
இந்த குழுவை அமைப்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் பெயரை வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி 4 எம்.பி.க்கள் பெயரை வழங்கியுள்ளது. ஆனால் இன்று குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் இடம் பிடித்துள்ளவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், நாங்கள் கொடுத்த பெயரை தவிர்த்துவிட்டு மற்றொரு பெயரை அறிவித்துள்ளது நேர்மையற்றது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: எங்களிடம் பெயர் கேட்கப்பட்டது. நாங்கள் கொடுத்த பெயர் குழுவில் இடம் பெறும் என எதிர்பார்த்தோம். கட்சியினால் கொடுத்த பெயர்கள் இடம்பெறும் என்று நம்பினோம். ஆனால், PIB வெளியிட்ட அறிக்கையை நாங்கள் பார்க்கும்போது, ஆச்சர்யம் அடைந்தோம். இப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது.
நான்கு பெயர் கேட்கப்பட்டு, நான்கு பெயர் கொடுக்கப்பட்டது. ஆனால் மற்றொரு பெயரை அறிவிப்பது அரசு தரப்பில் நேர்மையற்றது. அரசு முன்னதாக முடிவு செய்திருந்தாலும் கூட கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி மற்றும் கார்கேயிடம் பேசியிருக்கலாம். நாங்கள் எங்களுடைய நான்கு பெயர்களை மாற்றப்போவதில்லை. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், ராஜா பரார் மற்றும் நாசர் ஹுசைன் ஆகிய நான்கு எம்.பி.கள் பெயரை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)
