» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

தேர்தல் ஆணையம் அதன் கடமையைச் செய்யவில்லை. பாஜகவின் நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: மகாராஷ்டிராவை போன்று, பீகாரிலும் தேர்தலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் நமது அரசியலமைப்பை பாஜக தாக்கிக் கொண்டு வருகிறது.
நேற்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகாரில் தேர்தலை பாஜக அபகரிப்பதை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை. பாஜகவின் நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. பாஜக ஐந்து முதல் ஆறு முதலாளிகளுக்காக அரசாங்கத்தை நடத்துகிறது. நாட்டின் பொது மக்களுக்கான பணி செய்யவில்லை.
"ஜல், ஜங்கல், ஜாமின்" பழங்குடியினருக்கு சொந்தமானது. அவைகைள் அவர்களுக்கே இருக்கும். வன உரிமைப் பட்டாக்கள் பழங்குடியினருக்கு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் PESA மற்றும் பழங்குடி மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்களை நாங்கள் அமல்படுத்துவோம், பழங்குடியினருக்கு அவர்களின் நிலம் கிடைப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)

ஏமனில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிமிஷா : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 10, ஜூலை 2025 12:44:26 PM (IST)

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உட்பட 8பேர் மீது வழக்கு
வியாழன் 10, ஜூலை 2025 12:23:40 PM (IST)
