» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வீடியோவை காட்டி மிரட்டி கல்லூரி மாணவி பலாத்காரம்: பேராசிரியர்கள் உட்பட 3பேர் கைது!
புதன் 16, ஜூலை 2025 5:44:03 PM (IST)
கர்நாடகாவில் கல்லூரி மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 2 பேராசிரியர்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரியில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நரேந்திரா என்பவரும், உயிரியல் பேராசிரியராக சந்தீப் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இயற்பியல் பாடத்தில் குறிப்பு வழங்குவதாக கூறி, மாணவியை நரேந்திரா பெங்களூருவுக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவர்கள் மாரத்தஹள்ளியில் அறை எடுத்து தங்கினர். அப்போது நரேந்திரா, மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அதனை நரேந்திரா தனது செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உயிரியல் பேராசிரியர் சந்தீப்பும் அந்த ஆபாச வீடியோவை காண்பித்து மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும், இதுபற்றி அறிந்த சந்தீப்பின் நண்பரான அனூப் என்பவரும் அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பேராசிரியர்கள் உள்பட 3 பேரால் சீரழிக்கப்பட்ட மாணவி, அவர்களின் மிரட்டலுக்கு பயந்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே கூறவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்கள் தொடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. 3 பேரின் தொல்லை அதிகரிக்கவே நடந்த சம்பவங்கள் பற்றி மாணவி, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பெங்களூரு மாரத்தஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர்கள் நரேந்திரா, சந்தீப், அனூப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து, பௌத்தர், சீக்கியர்களை தவிர பிறரின் எஸ்சி சாதி சான்றிதழ் ரத்து : பட்னாவிஸ் அறிவிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 11:58:31 AM (IST)

கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து தவறாக மொழிபெயர்ப்பு... சர்ச்சையில் சிக்கிய மெட்டா!
வெள்ளி 18, ஜூலை 2025 11:50:54 AM (IST)

மருத்துவமனைக்குள் புகுந்து பரோல் கைதி சுட்டுக் கொலை - பீகாரில் பயங்கரம்!
வெள்ளி 18, ஜூலை 2025 11:04:25 AM (IST)

பீகாரில் 125 யூனிட் வரை வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லை : முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:57:30 AM (IST)

முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம்: இனி ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே!
வியாழன் 17, ஜூலை 2025 10:50:52 AM (IST)

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு
புதன் 16, ஜூலை 2025 5:18:58 PM (IST)
