» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்கள் திருடிய ராணுவ வீரர் கைது
திங்கள் 21, ஜூலை 2025 12:29:55 PM (IST)
மும்பை ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்களை திருடிய ராணுவ வீரர் கோவையில் கைது செய்யப்பட்டார்.
மும்பை கொலபாவில் உள்ள ராணுவ படை பிரிவில் கடந்த மாதம் ராணுவ வீரர்களின் 29 செல்போன்கள் மாயமாகின. இது குறித்து கப்பரேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மாயமான ஒரு செல்போன் தமிழ்நாட்டில் உள்ள கோவையில் சுவிட்ச்-ஆன் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் செல்போனை பயன்படுத்திய அல்பா துய்பாங் (24) என்பவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அல்பா துய்பாங் ராணுவ வீரர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மிசோரமை சேர்ந்த இவர், 4 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். இவர் மும்பை கொலபா ராணுவ முகாமில் பணியில் இருந்தபோது சக வீரர்களின் செல்போன்களை திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
போலீசார் அவரிடம் இருந்து 20 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவர் திருடி சென்ற செல்போன்களை விற்பனை செய்ய இருந்ததாக போலீசார் கூறினர். ராணுவ வீரர் அல்பா துய்பாங்கை கப்பரேடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
