» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:51:37 PM (IST)
ஆந்திராவில் 200 மி.மீ. அளவில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்துக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் விஷாகப்பட்டிணம், அனகப்பள்ளி, அம்பேத்கர் கோனசீமா, காக்கிநாடா, மேற்கு கோதாவரி உள்பட ஏராளமான மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் "ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கனமழை மற்றும் புயல் காற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அம்மாநில தலைமைச் செயலாளர் கே விஜயானந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், "பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகத்தை மேற்கொள்ள மின் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேவேளையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.” என தலைமைச் செயலாளர் விஜயானந்த் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 200 மி.மீ. அளவில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)
