» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் புகார் அளித்த சிறுமி உட்பட 6 பேர் கொடூர கொலை: போக்சோ குற்றவாளி வெறிச்செயல்!

சனி 11, ஜூலை 2026 11:41:29 AM (IST)

ஹைதராபாத் ஷபாத் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தில், போக்சோ வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த விவசாயி ஒருவர், தன் மீது பாலியல் புகார் அளித்த 16 வயது சிறுமி, அவரது குடும்பத்தினர் 2 பேர், தனது மனைவி மற்றும் 2 கைக்குழந்தைகள் உட்பட 6 பேரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

கொலைக்குற்றவாளியான விவசாயி மீது கடந்த மே மாதம் 16 வயது சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்தனர். இப் புகாரில் கைதாகி சிறையிலிருந்த அவர் அண்மையில் பிணையில் வெளியே வந்துள்ளார். தன் மீது புகார் அளித்த குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிட்ட அவர், நள்ளிரவில் சிறுமியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.

கதவைத் திறந்த சிறுமியின் தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த 60 வயது பாட்டியையும் குத்திக் கொலை செய்துள்ளார். எனினும், அதே வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது சகோதரியை அவர் எதுவும் செய்யவில்லை. பின்னர், 16 வயது சிறுமியைத் தனது காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, கிராமத்தின் அருகிலுள்ள குளத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை நீரில் வீசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இரவு 11:21 மணி அளவில் தனது சொந்த வீட்டுக்குத் திரும்பிய அவர், தனது 31 வயது மனைவி, 4 வயது மற்றும் 18 மாதங்களே ஆன தனது இரண்டு மகன்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக் கொலைகளைச் செய்து முடித்த பின், தனது தந்தைக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு காரில் தப்பியோடியுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், 6 பேரின் உடல்களையும் கைப்பற்றிக் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பியோடிய கொலைக் குற்றவாளியைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory