» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசு விழாக்களில் இனி மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு!

சனி 11, ஜூலை 2026 3:40:12 PM (IST)

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, அரசு விழாக்களின் தொடக்கத்தில் முதலில் மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து தேசியப் பாடல் (வந்தே மாதரம்), இறுதியாக நிறைவாகத் தேசிய கீதம் (ஜன கண மன) பாடப்பட வேண்டும் என்ற வரிசைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்தைப் பாடும்போது அதன் அசல் வரிகளையும், சரியான உச்சரிப்பு முறைகளையும் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய கீதம் அல்லது தேசியப் பாடல் கட்டாயம் இசைக்கப்பட வேண்டிய நிகழ்வுகள், அதேபோல் அவை இசைக்கப்படக்கூடிய விருப்பத்திற்குரிய நிகழ்வுகள் குறித்த விரிவான பட்டியலையும் தனது புதிய உத்தரவில் உள்துறை அமைச்சகம் உள்ளடக்கியுள்ளது.

அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மத்திய அமைச்சகங்களுக்கு இப் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வரிசைமுறையைத் தவறாமல் பின்பற்றுமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட இவ்விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மத்திய அமைச்சகங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory