» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:46:00 PM (IST)

உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் சுதந்திர தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனின் சுதந்திர தினத்தன்று வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமைதியை உருவாக்க முயற்சிக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.
தற்போது முழு உலகமும் இந்த கொடூரமான போரை கண்ணியத்துடனும் நீடித்த அமைதியுடனும் முடிவுக்கு கொண்டுவரும் பணியில் இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம். பேச்சுவார்த்தையை வலுப்படும் ஒவ்வொரு முடிவும் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் மற்றூம் அதற்உ அப்பாலும் சிறந்த பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:11:03 AM (IST)

டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்
திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)

வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து வன்முறை: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்!
சனி 20, டிசம்பர் 2025 10:46:38 AM (IST)

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

