» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா குறித்து முகமது யூனுஸின் சர்ச்சை பேச்சு: பிரியாவிடை உரையில் பரபரப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:30:15 PM (IST)
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து விடைபெறும் வேளையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு முகமது யூனுஸ் பேசியிருப்பது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். தற்போது நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (BNP) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், முகமது யூனுஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.தனது 18 மாத கால ஆட்சி குறித்து ஆற்றிய பிரியாவிடை உரையில் முகமது யூனுஸ் குறிப்பிட்டதாவது: வெளியுறவுக் கொள்கை: "எனது பதவிக்காலத்தில் வங்கதேச வெளியுறவுக் கொள்கையில் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை மீட்டுள்ளேன். நாடு எந்த ஒரு வெளிநாட்டிற்கும் அடிபணியவில்லை. பிற நாடுகளின் உத்தரவுப்படி நமது அரசு செயல்படவில்லை."
பொருளாதார மண்டலம்: "நமது கடல் பகுதி என்பது வெறும் புவியியல் எல்லை மட்டுமல்ல; அது உலக நாடுகளுடன் இணைவதற்கான ஒரு நுழைவு வாயில். நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களை (வடகிழக்கு மாநிலங்கள்) உள்ளடக்கிய இந்த பிராந்தியம் மிகப்பெரிய பொருளாதார ஆற்றலைக் கொண்டுள்ளது."
இந்த உரையில் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளான அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இணையாக முகமது யூனுஸ் பட்டியலிட்டுள்ளார்.
இது இந்தியாவின் உள்நாட்டு ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குவது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தனது பதவிக்காலம் முழுவதும் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்ததாக அவர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் உள்ள நிலையில், இந்த இறுதி உரை மேலும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பல்களைத் தாக்கினால் ஈரானின் மின் நிலையங்கள் அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வியாழன் 23, ஜூலை 2026 11:36:09 AM (IST)

ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை: இந்தியா, சீனா வந்த 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் திசைமாற்றம்!
புதன் 22, ஜூலை 2026 4:22:18 PM (IST)

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)


