» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 15 பேர் பலி
சனி 28, பிப்ரவரி 2026 5:03:54 PM (IST)

பொலிவியா நாட்டின் எல் ஆல்டோ (El Alto) நகரில் கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொலிவியா அரசுக்குச் சொந்தமான கரன்சி நோட்டுகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த ராணுவ விமானம், எல் ஆல்டோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்தது. ஓடுபாதையில் தரை இறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானம் நிலைதடுமாறி அருகிலிருந்த மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார்களும் நசுங்கி பலத்த சேதமடைந்தன.
இந்த கோர விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தில், அதில் கொண்டு செல்லப்பட்ட கட்டுக்கட்டான கரன்சி நோட்டுகள் சாலை எங்கும் சிதறி விழுந்தன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, அங்குக் கூடியிருந்த மக்கள் சிதறிக்கிடந்த பணத்தை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, மீதமுள்ள பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்கள் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி!
வெள்ளி 6, மார்ச் 2026 12:17:23 PM (IST)

ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:08:13 AM (IST)

மிக நீண்ட போருக்கு ஈரான் தயார்: மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் அழைப்பு!
புதன் 4, மார்ச் 2026 5:14:56 PM (IST)

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடித் தொடர்கிறது : டிரம்ப் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 5:19:47 PM (IST)

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தமிழக மாணவி உட்பட 4 பேர் பலி - கொலையாளி சுட்டுக்கொலை!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:00:56 PM (IST)

மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்: ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:31:26 PM (IST)

