» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் யாசகம் பெற்றவர் அடித்துக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!

புதன் 25, அக்டோபர் 2023 10:51:20 AM (IST)

தென்காசியில் யாசகம் பெற்றவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தென்காசி மேலப்புலியூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (53). இவர் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று வந்தார். தென்காசி யானை பாலம் பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் தங்கி இருந்தார். நேற்று அவரது உடல் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்தது. இதுகுறித்து தென்காசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரநாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

போலீசார் விசாரணை நடத்தியதில்,  சங்கரநாராயணன் பிணமாக கிடந்த இடத்திலும், அவர் மீதும் கற்களால் செய்யப்பட்ட சாமி சிலைகள் கிடந்தது. இதனால் மர்ம நபர்கள் சாமி சிலைகளால் தாக்கி சங்கரநாராயணனை கொலை செய்தது தெரியவந்தது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக சாமி சிலைகளை வைத்து அடித்து கொன்றனர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory