» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட யோகா போட்டி ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி முதலிடம்

வெள்ளி 27, அக்டோபர் 2023 2:57:22 PM (IST)



தென்காசி மாவட்ட அளவிலான யோகா போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி முதலிடம் பெற்றது.

தென்காசி மாவட்ட அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்- 2023 போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவிகள் ஆஷினி சிவசங்கரி, ஸ்வேதா தர்ஷினி, சஞ்சனி, ஹர்ஷிகா ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. தீப்ஷிகா, ஸ்ருதிகா ஆகியோர் இரண்டாமிடமும், சாய் விஜய், அபிஷா தேவி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்றவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory