» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐபிஎஸ் பதவியேற்பு

வெள்ளி 27, அக்டோபர் 2023 4:56:23 PM (IST)

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐ.பி.எஸ். பதவியேற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகின்றது. கடந்த 4 மாதங்களாக மாநகர காவல்துறை ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், மாநகர் மற்றும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறியது. ஒரே மாதத்தில் 14 கொலை சம்பவங்கள் நடைபெற்றது. 

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக நேர்மையான, அதிரடியான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், நெல்லை மாநகர காவல்துறையின் முதல் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி பதவியேற்றுக் கொண்டார்.திருச்சியை சேர்ந்த இவர் பி.இ., மற்றும் எம்.எஸ் (ஐடி) முதுநிலை பட்டம் பெற்றவர். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். நெல்லை மாநகர காவல்துறையின் முதல் பெண் ஆணையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory