» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த பெண் யானையின் உடல் அடக்கம்

சனி 28, அக்டோபர் 2023 5:00:55 PM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்த பெண் யானையின் சடலத்தை மீட்டு வனத்துறையினர் அடக்கம் செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பாறை அருகே இருக்கும் நீரோடை பகுதிகளில் துர்நாற்றம் வீசியது. அதனை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது பாறையின் இடுக்கில் சிக்கி பெண் யானை இறந்திருப்பதை பற்றி கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

உயிரிழந்த யானைக்கு 15 வயது இருக்கும் என்றும் பெரிய பாறையின் வழியே இறங்கி வரும் போது தவறி கீழே விழுந்து இறந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சுமார் 15 நாட்களுக்கு முன்பே உயிரிழந்த யானைக்கு உடற்கூறாய்வு முடிந்து அடக்கம் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory