» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் புதிய திட்டம் அறிமுகம்!

திங்கள் 30, அக்டோபர் 2023 5:31:45 PM (IST)

நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு பி.இ. பயின்று பணியாற்று பவர்களுக்கு எம்.இ. முதுநிலை கல்வி பயில மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
`
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பி.இ. பயின்று பணியாற்றுபவர்கள் எம்.இ. முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு அகில இந்தியா தொழில்நுட்ப கவுன்சில் (ஏ,ஐ.டி.சி) எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பி.இ. படித்துவிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் நேரடியாக எம் இ முதுகலை பட்ட படிப்பில் சேருவதை கருத்தில் கொண்டு புதிய திட்டத்தை ஏ,ஐ.டி.சி அறிமுகம் செய்துள்ளது. 

இந்த திட்டம் தொடங்குவதற்கு நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு அகில இந்தியா தொழில்நுட்ப கவுன்சில் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் பி.இ. படித்தவர்கள் எம் .இ மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பாடத்திட்டத்தில் சேரலாம். இதற்காக இரண்டும் கலந்த முறையில் (Blended method) எம்.இ கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று டிப்ளமோ படித்துவிட்டு பணியாற்றுபவர்கள் பி.இ பயில எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பணிபுரிந்துகொண்டே பொறியியல் முதுகலை பட்ட படிப்பை பயில்வதற்கு அகில இந்தியா தொழில்நுட்ப கவுன்சில் நல்ல வாய்ப்பு அளித்துள்ளது இதனை பணியாற்றுபவர்கள் நன்கு பயன்படுத்தி பலன் பெறலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory