» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிச. 15ல் ஓய்வூதியர்களுக்கான குறை தீர்வு கூட்டம்: ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தகவல்

வெள்ளி 8, டிசம்பர் 2023 5:53:10 PM (IST)

தென்காசியில் வருகிற 15ஆம் தேதி ஓய்வூதியர்களுக்கான குறை தீர்வு  கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன்  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் : விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், தற்போதைய தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கான குறை தீர்வு கூட்டமானது தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 15.12.2023 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெற உள்ளது.

மேற்படி கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory