» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கனமழை எச்சரிக்கை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சனி 9, டிசம்பர் 2023 10:01:41 AM (IST)
கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (9.12.2023) சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.