» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கனமழை எச்சரிக்கை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சனி 9, டிசம்பர் 2023 10:01:41 AM (IST)

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (9.12.2023) சிறப்பு வகுப்புகள் உட்பட  அனைத்து வகுப்புகளுக்கும்  விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory