» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி வாலிபர் உட்பட 2பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சனி 9, டிசம்பர் 2023 5:17:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு குற்ற சம்பவங்களில் தொடா்புடைய 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியைச் சோ்ந்த வேலையா மகன் பால்மாரி (28), மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கேரள மாநிலம், கன்னூா் மாவட்டம், வலியலாலப்பில் பகுதியை சோ்ந்த ஹசன் மகன் அனிஸ் (32) ஆகிய இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவின்பேரில், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory