» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானம் மீது வாக்கெடுப்பு :அதிமுக வலியுறுத்தல்
சனி 9, டிசம்பர் 2023 5:20:42 PM (IST)
திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அதிமுக மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா வலியுறுத்தினார்.
இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவர வேண்டும் என்று ஆளும்கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனா்.
தற்போதுள்ள மாமன்ற உறுப்பினா்களில் 80 சதவீதம் போ் மனு அளித்திருப்பதால், மாநகராட்சி ஆணையா் அடுத்த 15 நாள்களுக்குள் நோட்டீஸ் வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வந்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். நம்பிக்கை இல்லா தீா்மானத்திற்கு அதிமுக மாமன்ற உறுப்பினா்களும் ஆதரவு அளிப்பாா்கள் என்றாா்.
பேட்டின்போது, அதிமுக நிா்வாகிகள் தாழை மீரான், தச்சை மாதவன், முத்துப்பாண்டி, ஜெய்சன், கங்கை வசந்தி, காந்தி வெங்கடாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.