» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மதிதஇ மே நி பள்ளியில் பாரதியாரின் பிறந்தநாள் விழா. ‌

செவ்வாய் 12, டிசம்பர் 2023 10:30:04 AM (IST)



பாரதியார் 142 பிறந்தநாள் முன்னிட்டு திருநெல்வேலி "அஸ்டரோ கிளப்” சார்பாக அவர் படித்த வகுப்புக்கு சென்று அவரின் திரு உருவச்சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர். 

தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு பாரதி முகமூடி அணிந்து மகிழ்ந்தனர். டாஸ்  மாநில செயற்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு "பாரதியும் வானியலும்” தலைப்பில் பேசினார். 

அவர் கூறியதாவது: பாரதி உலகதொடர்பு உடையவர் மேல் நாடுகளில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் தேசத்தில் நிகழ்த்தபட விரும்பி கவிதைகள் முனைந்தார் "வானை அளப்போம் கடல்மீனை அளப்போம் உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம்” மற்றும் அவர்காலத்தில் நிகழ்ந்த வானியல் தூமகேது நிகழ்வை கவிதையாக தந்துள்ளார். 

நாம் இன்று சந்திரமண்டலத்திற்கோர் பாலம் அமைப்போம் என ககன்யான் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் நிருப்பித்துவிட்டது . மேலும் அவர் கனவை நனவாக்க நன்கு பல கல்வி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கூறி வாழ்த்தினார். ஆசிரியர்கள் செல்லச்சாமி மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்றார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory