» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் வாறுகால் அமைக்கும் பணிகள் : நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
செவ்வாய் 12, டிசம்பர் 2023 11:20:43 AM (IST)
திருநெல்வேலியில் வாறுகால் அமைக்கும் பணிகள் காரணமாக நாளை (டிச.13) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், "திருநெல்வேலி சந்திப்பு போக்குவரத்துப்பிரிவு செங்கோட்டை கொல்லம் செல்லும் சாலையில் டவுண் வழுக்கோடை அருகே அச்சாலையின் குறுக்காக கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கும் பணி வரும் 13.12.2023 ம் தேதி புதன்கிழமை முதல் தொடங்க இருப்பதால் அச்சாலையை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் கீழ் கண்ட பட்டியலின்படி மாற்றுப் பாதையைப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் TVS கார்னர், . பேட்டை, ம.தி.தா இந்துக்கல்லூரி வழியாக செல்லும் சாலையில் வாகைகுளம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பழையபேட்டை மின்அலுவலுகம் வழியாக இடதுபுறம் திரும்பி தென்காசி சாலையை சென்றடையலாம்.
2. பாபநாசத்திலிருந்து திருநெல்வேலி வரும் வாகனங்கள் பேட்டை ம.தி.தா இந்துக்கல்லூரி வழியாக திருப்பணிகரிசல்குளம் செல்லும் சாலையில் வாகைகுளம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பழையபேட்டை மீன்அலுவலுகம் வழியாக தென்காசி சாலை சென்று வலதுபுறம் திரும்பி திருநெல்வேலி வந்தடையலாம்.
3. சேரன்மகாதேவி, முக்கூடல் பேட்டையிலிருந்து திருநெல்வேலி வரும் வாகனங்கள் பேட்டை ரொட்டிகடை பஸ்நிறுத்தத்திலிருந்து பழையபேட்டை மின்அலுவலுகம் வழியாக தென்காசி சாலை சென்று வலதுபுறம் திரும்பி திருநெல்வேலி வந்தடையலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.