» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதன் 13, டிசம்பர் 2023 8:08:22 PM (IST)
சங்கரன்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு 8 மணி நேரம் மற்றும் ஓய்வூதியம், ஊழியர்களின் குடும்பத்திற்கு மருத்துவ வசதிகளை வழங்கிட வேண்டும், கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி பிரிண்டர், அதிவேக இணைய சேவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன்பு தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கரன்கோவில் கிளை செயலாளர்கள் ஜெயராமன், பண்டாரம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர்கள் முருகன், பரமசிவன், பொருளாளர்கள் பட்டுராஜன், பூசை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.