» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேகத்தடையில் பைக்கில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழப்பு: உறவினர் காயம்!

புதன் 13, டிசம்பர் 2023 8:14:26 PM (IST)

சங்கரன்கோவில் அருகே வேகத்தடையில் மோட்டார் பைக்கில்  இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்தார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் தலக்கு பாண்டியன் (34). கொத்தனார்.  தலக்கு பாண்டியனும் அவரது உறவினர் முறம்பை சேர்ந்த மணிகண்டன் (32) என்ற வாலிபரும் சங்கரன்கோவிலில் இருந்து சொந்த ஊரான வேலாயுதபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.  

மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார்.  மோட்டார் சைக்கிளில் பின்புறம் தலக்கு பாண்டியன் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து மணிகண்டனும் தலக்கு பாண்டியனும் தவறி விழுந்து காயம் அடைந்தனர். இதில் கொத்தனார் தலக்கு பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

காயமடைந்த மணிகண்டன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கொத்தனார் தலக்கு பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து கரிவலம்வந்தநல்லூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory