» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 14, டிசம்பர் 2023 8:05:49 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய மகன் இசக்கிமுத்து (23). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்ற சூசை (25), இசக்கிமுத்து ராஜா என்ற ராஜா (29), ஜெபராஜ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 7-5-2020 அன்று இரவில் இசக்கிமுத்து, ராஜவல்லிபுரம் பகுதியில் சென்றபோது, அங்கு வந்த இசக்கிமுத்து ராஜா, சுரேஷ், ஜெபராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து இசக்கிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். 

இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து சுரேஷ், இசக்கிமுத்து ராஜா, ஜெபராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை நெல்லை 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது

.வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ், இசக்கிமுத்துராஜா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். வழக்கில் தொடர்புடைய ஜெபராஜ் தலைமறைவாக உள்ளதால், அவர் மீதான வழக்கு தனியாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory