» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தம்பியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய அண்ணன் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

வியாழன் 14, டிசம்பர் 2023 8:08:16 AM (IST)

கடையநல்லூர் அருகே தம்பியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய அண்ணன் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் என்பவரின் மகனான கருப்பையா என்பவருக்கும் அவரின் உடன் பிறந்த அண்ணனான வெள்ளத்துரை என்பவருக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 21.09.2016 அன்று கருப்பையா குடித்துவிட்டு அவர்களது  கிணற்றில் உள்ள மோட்டார் ஸ்டாட்டரை உடைத்ததால் கோபம் அடைந்த வெள்ளத்துரை கருப்பையாவை கம்பால் அடித்து கொலை செய்து பின்னர் அவரது உடலை சாக்கில் கட்டி இருசக்கர வாகனம் மூலமாக கிருஷ்ணாபுரம் பெரியகுளம் பாலம் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார். 

இது தொடர்பாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் இறந்த நபர் மற்றும் குற்றவாளி யார் என்று தெரியாததால் வழக்கானது கடந்த 07 வருடங்களாக  நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் வழக்கின் இறந்த நபர் மற்றும் குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுரேஷ் குமார் உத்தரவிட்டதின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் பல்வேறு  கோணங்களில்  தீவிர விசாரணை மேற்கொண்டனர்

இதில் வெள்ளத்துரை  என்பவர்  தனது தம்பியை கொலை செய்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் வழக்கின் குற்றவாளியான கரடி குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராயப்பன் என்பவரின் மகன் வெள்ளத்துரை(50) என்பவரை காவல் துறையினர் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory