» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உடல் உறுப்புக்கள் தானம் செய்த மாணவருக்கு அரசு சார்பில் மரியாதை!

வெள்ளி 15, டிசம்பர் 2023 4:20:39 PM (IST)



கல்வி பயணமாக குவைத்திலிருந்து அமெரிக்காவில் சென்ற மாணவர் இறந்ததைத் தொடர்ந்து, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது ஷபீர் ஆலம், தலைமையில் அன்னாரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், மூலைக்காடு பகுதியை சார்ந்த சகாய ஜெபாஸ் பிரஜோப் (18) என்பவர் கல்வி பயணமாக குவைத்திலிருந்து அமெரிக்காவிற்கு சென்ற நிலையில் அமெரிக்காவில் இறந்துள்ளார். அன்னாரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மூலைக்காடு பகுதியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது ஷபீர் ஆலம், தலைமையில் அன்னாரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு இன்று (15.12.2023) நல்லடக்கம் செய்யப்பட்டது.

சகாய தாமஸ் ரூபன் மகன் சகாய ஜெபாஸ் பிரஜோப் (18) என்பவர் இராதாபுரம் வட்டம், மூலைக்காடு பகுதியை சேர்ந்தவர். இவர் குவைத்தில் உள்ள Indian Centre பள்ளியில் பயின்று வருகிறார். கல்வி பயணமாக 55 மாணவர்களுடன் அமெரிக்காவிற்கு சென்ற சகாய ஜெபாஸ் பிரஜோப் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 04.12.2023 அன்று இறந்து விட்டார்.

மேலும், அன்னாரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, இன்றைய தினம் மூலைக்காடு பகுதிக்கு அன்னாரது உடல் கொண்டுவரப்பட்டது. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது ஷபீர் ஆலம், தலைமையில் அன்னாரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், இராதாபுரம் வட்டாட்சியர் பாஸ்கரன் (பொ), வள்ளியூர் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ , ஜோசப் பெல்சி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory