» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் பைக் சாகசம் செய்த 3 பேருக்கு அபராதம்: வாகனம் பறிமுதல்

திங்கள் 1, ஜனவரி 2024 5:25:30 PM (IST)



குற்றாலத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று  நபர்களுக்கு அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு  வந்தனர். இதுகுறித்து குற்றாலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்டவர்கள் தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நாகூர் கனி என்பவரின்  மகன் செய்யது சுலைமான் தாதா பீர் (22), தென்காசி ஜம்ஜம் நகர்  சையது சுலைமான் என்பவரின் மகன் முகமது தெளபிக் (21), தென்காசி மாதா கோவில் ஒன்றாம் தெரு புவனேச பாண்டியன் என்பவரின் மகன் மணிகண்டன் (21) என தெரியவந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் பிடிபட்ட மூன்று பேருக்கும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தலா ரூ.10,000ம்  அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மூவருக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory