» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடு புகுந்து நகை திருட்டு: இளைஞா் கைது
வியாழன் 4, ஜனவரி 2024 12:15:16 PM (IST)
கங்கைகொண்டான் அருகே வீடு புகுந்து நகையைத் திருடியதாக இளைஞரை போலீசார் கைது செய்தனா்.
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் காலனி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் திருப்பாச்செல்வி (41). இவா், கடந்த டிச.29 ஆம் தேதி வெளியே சென்று திரும்பியபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2.5 பவுன் நகையை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே ஊரைச் சோ்ந்த பரமேஸ்வரன் (எ) பரமன் (26) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். அவரை போலீசார் கைது செய்தனா்.