» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பனையில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.50ஆயிரம் நிதியுதவி!

வியாழன் 4, ஜனவரி 2024 5:18:56 PM (IST)



பனையில் இருந்து தவறி விழுந்து இறந்த பனைத்தொழிலாளி குடும்பத்திற்கு திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில்  ரூ.50ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருநேல்வேலி மாவட்டம், கான்சாபுரம், மேலத்தோணித்துறையை சேர்ந்த ஜெசிபிந்து என்பவர், தனது கணவர் துரைராஜ் நாடார் என்பவர் கடந்த 26.11.2023 அன்று பனை ஏறும்போது பனையில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். மேற்படியார் மனைவி ஜெசிபிந்து என்பவர் தனது குடும்பம் வறுமையில் வாடுவதால் சங்கத்திலிருந்து உதவிசெய்ய கேட்டு மனு கொடுத்திருந்தார்.

மேற்படி மனுவை சங்க நிர்வாக சபை கூட்டத்தில் வைத்து பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்க முடிவு செய்து ஜெசிபிந்து-விடம் சங்கத்திலிருந்து ரூ.  ஐம்பதாயிரத்திற்கான காசோலையை சங்க தலைவர் காளிதாசன் தலைமையில், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்க காரியக்கமிட்டி & நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சங்க ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory