» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெடிகுண்டு மிரட்டல்: நெல்லை அறிவியல் மையத்தில் போலீசார் தீவிர சோதனை

சனி 6, ஜனவரி 2024 5:00:53 PM (IST)

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக நெல்லை அறிவியல் மையம் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர்.

இந்தியாவில் உள்ள அறிவியல் மையங்களின் தலைமையகமாக செயல்பட்டு வரும் கொல்கத்தா அறிவியல் மையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரே அறிவியல் மையமான நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தற்போது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நெல்லை அறிவியல் மையம் முழுவதும் சோதனையிட்டு வருகின்றனர்.

மாநகர காவல்துறை உதவி ஆய்வாளர் குலசேகரன் தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அறிவியல் மையத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் பார்வையாளர்களின் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory