» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொங்கல் பண்டிகை: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தேபாரத் ரயில்!

வெள்ளி 12, ஜனவரி 2024 9:35:14 PM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா் - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் - நாகர்கோவில் இடையே ஜன. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில், எழும்பூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.45 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.

மறுவழித்தடத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூா் இடையே ஜன. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகா்கோவிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு எழும்பூா் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் நின்றுச் செல்லும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory